தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சரிந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த வார தொடக்கத்திலிருந்து விலை அதிகரிக்க தொடங்கியது. கடந்த 23-ஆம் தேதி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,300-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரனுக்கு ரூ.58 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.

கடந்த ஒரே வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 அதிகரித்து அதிர்ச்சியை அளித்தது. இந்த வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது. இதனிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71 ஆயிரத்து160க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8 ஆயிரத்து 920க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.71 ஆயிரத்து 360க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.