திமுக அளித்த வாக்குறுதி, முதலமைச்சர், அமைச்சர் அளித்த உறுதிமொழிகள் என 3537 இல் 3,038க்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, 2023–24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். 21ம் தேதி வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இன்று சட்டப்பேரவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. கேள்வி நேரம் முடிந்த பிறகு நிதி நிலை அறிக்கைகள் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், கண்முன் எதிரிகளே இல்லாத நிலையில், அவர்கள் எல்லாம் நிறைவேற்றிய மாதிரியும், நாங்கள் செய்யாத மாதிரியும் சொன்னதற்கு பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளோம். அதிமுக கடந்த ஆட்சிக் காலத்தில் அளித்த 507 வாக்குறுதிகளில் 269 வாக்குறுதிகளுக்கு மட்டுமே அரசாணை வெளியிட்டது.
காலை உணவு வழங்குவோம் என அதிமுக வாக்குறுதியில் கூறி செய்ய முடியாததை நாங்கள் செய்து காட்டியுள்ளோம். திமுக அளித்த வாக்குறுதி, முதலமைச்சர், அமைச்சர் அளித்த உறுதிமொழிகள் என 3537 இல் 3,038க்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.