தமிழ்நாட்டில் புதிதாக 1,808 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள் ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 403 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,808 பேருக்கு தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனாவால் 25 லட்சத்து 48 ஆயிரத்து 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 447 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 91 ஆயிரத்து 222 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 911 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 126 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 161 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் 169 பேருக்கும் ஈரோட்டில் 130 பேருக்கும் சேலத்தில் 105 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 6 பேருக்கும் ராமநாதபுரத்தில் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.







