கள்ளக்குறிச்சி வழக்கு; நீதிமன்ற நெறிமுறைகளை மீறிய தீர்ப்பு- சிபிஎம்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரம்பு மீறியதாக உள்ளது என சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிமன்ற நெறிமுறைகளை மீறி உயர்நீதிமன்ற தீர்ப்பளித்து…

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரம்பு மீறியதாக உள்ளது என சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிமன்ற நெறிமுறைகளை மீறி உயர்நீதிமன்ற தீர்ப்பளித்து உள்ளது என்றும் பிணையை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய சிபிஐ (எம்) சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று அறிக்கையின் வாயிலாக வற்புறுத்தியிருந்த நிலையில் ஸ்ரீமதியின் தாயாரை சந்தித்தார்.

இதுகுறித்து சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரம்பு மீறியதாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு இந்த வழக்கை முடித்து வைப்பது போலவே உள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதியின் மரணத்தில் பெற்றோருடன் இணைந்து தொடர்ந்து சிபிஎம் போராட இருக்கிறோம். பிணையை ரத்து செய்ய வழக்கறிஞர்களோடு ஆலோசித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மாணவியின் பெற்றோருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். ஆதாரங்கள் அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு இருந்தாலும் போலீஸ் விசாரணை இன்னும் முடியவில்லை. விசாரணை நடைபெறும் போது நீதிமன்றமே உயிரிழப்பு தான் என சொல்ல முடியாது என்று கூறினார்.

கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்கிறோம் என்ற பெயரில் காவல்துறையினர் அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்கள் அளிக்க வருபவர்கள் கூட காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டு அச்சப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.