சென்னையில் வாக்களித்த சசிகலா “அக்கா இல்லாமல் முதல்முறையாக வாக்கு செலுத்துகிறேன்” என்று உருக்கமாக பேசினார்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் நடக்கும் இந்த வாக்குப் பதிவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று காலை தொடங்கி உற்சாகத்துடன் நடைபெற்றுவரும் வாக்கு பதிவில் பலர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவு செய்தனர். இந்நிலையில் இன்று சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள வித்யோதயா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வி.கே.சசிகலா தனது வாக்கினை பதிவு செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,“வாக்களிக்கும் போது என்னுடைய அக்கா( மறைந்த முதல்வர் ஜெயலலிதா) உடன் வாக்களிக்க வருவேன். இந்த முறை தான் தனியாக வந்துள்ளேன்” என்று உருக்கமாக தெரிவித்தார்.