27 C
Chennai
December 6, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

கர்நாடக வனத்துறை தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு: ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் கண்டனம்

கர்நாடக வனத்துறையினர் தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு ஓடுகிறது. இப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குச் சென்ற 4 தமிழர்கள் மீது கர்நாடக வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு மீனவர் குண்டடிபட்டு ஆற்றில் விழுந்துள்ளார். தீயணைப்பு வீரர்களின் தேடுதலுக்குப் பிறகு அந்த மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சம்பவத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி  கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக வனத்துறை அதிகாரிகள் சுட்டதில் தமிழ்நாடு மீனவர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சிக்குரியது.

இந்த சம்பவத்தால் தமிழக மீனவர்கள் மிகுந்த துயரத்தில் இருக்கிறார்கள். மேலும் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியில் வாழும் மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் நுழைந்த தமிழக மீனவர்களைப் பாதுகாப்பாக பிடித்து, விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். அதனை விடுத்து, துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது,

பதற்றத்தில் இருந்து மக்கள் விடுபடவும், இது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்கவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தமிழக அரசு, கர்நாடக அரசுடன் தொடர்பு கொண்டு மீனவரின் உயிரிழப்புக்கு காரணமான வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

மேலும் தமிழ்நாடு அரசு, மீனவர்களின் மீன்பிடித் தொழில் சம்பந்தமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் கண்டனம்

இதேபோல் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக மீனவர்கள் மீது கர்நாடாக வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது சட்டத்தை மீறிய செயலாகும். இதை எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாது. இந்த துயரச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பின்னரும் இது குறித்து கர்நாடக வனத்துறைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது மீனவர் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜா உயிரிழக்கக் காரணமான கர்நாடக மாநில வனத்துறைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன், உயிரிழந்த மீனவருக்கு இருமாநில அரசுகளும் நிதி உதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy