முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் மே 31 வரை ரத்து: ஆர்.கே.செல்வமணி!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சினிமா மற்றும் சின்னத்திரை படப்படிப்புகள் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளன (ஃபெப்சி) தலைவர், ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனிடையே சினிமா, சின்னத்திரை படப்பிடிப் புகளை, நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், கொரோனாவின் தீவிரம் காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்படிப்புகள் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஃபெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் கூறும்போது, கொரோனோ நிவாரண உதவியாக திரைப்பட தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.2000 வழங்க வேண்டும், திரைப்பட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தனி முகாம் ஏற்படுத்த வேண்டும் என கடந்த வாரம் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். இந்நிலையில், இந்த மாதம் இறுதி வரை ஷூட்டிங்கில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம்’ என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு பணிகளில் தமிழர்கள் மட்டுமே தேர்வுவெழுதும் வகையில் சட்டத்திருத்தம் கோரும் பாமக, விசிக

Web Editor

1,390 கார்களை திரும்ப பெறும் டொயோட்டா நிறுவனம்

Web Editor

”டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கின்றவராகவே முதல்வர் விளங்குகிறார்”- அமைச்சர் காமராஜ்!

Jayapriya