தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் விவசாயிகள் தேங்காயை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சாலை முழுவதும் தேங்காய் துண்டுகளாகக் காணப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் சார்பில் மாபெரும் தேங்காய் உடைப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மத்திய மாநில அரசுகள் தென்னை விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும். உரித்த தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150க்கும் உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50க்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும், நியாயவிலைக்கடைகளில் பாமாயில் எண்ணெய்க்குப் பதிலாகத் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும், பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகம் செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் போராட்டத்தின்போது வலியுறுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘குயின்ஸ் லேண்ட் விவகாரம்; 200 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு’
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை அறந்தாங்கி நால்ரோடு பகுதியிலிருந்து தென்னை விவசாயிகள் தென்னை வியாபாரிகள் உள்ளிட்டோர் என ஏராளமானோர் பேரணியாகச் சென்று பதாகைகளைக் கொண்டு கோஷமிட்டு பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு தேங்காயை உடைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சில மணிநேரம் பாதிப்படைந்தது.