எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்பக்கட்ட பணிகள்தான் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த இரு நாட்களாக பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் மீது குறிவைத்து கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றதை சுட்டிக்காட்டினார். இந்த தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த செயல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, நாட்டிற்கு அச்சுறுத்தும் வகையில் இருக்க கூடிய தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர் என எல் முருகன் குறிப்பிட்டார்.
இது தான் நட்டா சொன்னது
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 95% நிறைவு செய்ததாக பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜே.பி.நட்டா என்ன சொல்ல வந்தார் என்பதை புரிந்து கொள்ளாமல் இங்கு உள்ள அரசியல்வாதிகள் அந்த பகுதிக்கு சென்று அங்கு எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை என்று அந்த பகுதியை காண்பித்து விளம்பர அரசியல் செய்கிறார்கள் என குற்றம்சாட்டினார். ஆரம்பக்கட்ட பணிகள் தான் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்தார் என எல்.முருகன் விளக்கமளித்தார்.
ஆ.ராசா பேசியது கண்டனத்திற்கு உரியது என தெரிவித்த அவர், இந்து மக்களை ஆ.ராசா அவமதித்ததை மக்கள் பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்றும்
ஓட்டுக்காக இந்து மக்களை ஏமாற்றும் செயலை தி.மு.க நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ராகுல் காந்தி நடைபயணம் ஆரம்பக்கட்டத்திலேயே தோல்வி அடைந்துள்ளது என சாடிய எல். முருகன் , ராகுல்காந்தி காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும் என சாடியுள்ளார்.
-இரா.நம்பிராஜன்