அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் மார்ச் 28ம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்கள் நிராகரிப்பட்டன. மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் : சட்டப்பேரவையில் இபிஎஸ் – ஓபிஎஸ் காரசார விவாதம்!!
இதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். பின்னர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரி அதிமுக தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிமுகவின் சட்டவிதிகள் திருத்தம், நிர்வாகிகள் மாற்றம் போன்றவற்றை ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுக உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில், எதிர்க்கட்சி தலைவர் அறையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கைகுலுக்கி, சால்வை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர். தேர்தல் ஆணையம் இபிஎஸ்-ஐ அங்கீகரித்ததைக் கொண்டாடும் விதமாக சக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.