அதிமுக அரசு மீது அவதூறு பரப்புரை வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். ஜாதி சண்டகள், கலவரங்கள் இல்லாமல் அதிமுக ஆட்சியில் மக்கள் தமிழகத்தில் அமைதியாக வாழ்வதாகக் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அதிமுக அரசு மீது அவதூறு பரப்புரை செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தில்லுமுல்லு செய்து தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என எண்ணுவதாகக் முதலமைச்சர் குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியில் டெண்டர் விடுவதில் எந்த முறைகேடும் நிகழவில்லை, எனக் கூறிய முதல்வர் பழனிசாமி, டெண்டரில் முறைகேடு நிகழ்ந்ததாக யாரோ எழுதிக்கொடுத்ததை பேசிவிட்டு, மு.க.ஸ்டாலின் மாட்டிக்கொள்வதாக விமர்சித்தார்.







