32.7 C
Chennai
May 13, 2024
மழை தமிழகம் செய்திகள்

ஓமலூரில் அரசு அலுவலகங்களில் குளம்போல் தேங்கிய மழைநீர் – பொதுமக்கள் அவதி..!

ஓமலூர் தாசில்தார் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களின் வளாகங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலை வரை தொடர்ந்தது. இதனால், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் குளம்போல தேங்கியது. அலுவலகம் செல்லும் பாதைகள் அனைத்தும் மழைநீரில் மூழ்கின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால், மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் மழை நீரிலேயே நடந்து சென்று அதிகாரிகளை சந்தித்தனர். இதேபோல், ஓமலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்திலும் அதிகளவில் மழைநீர் தேங்கியதால், அதிகாரிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையும் படியுங்கள் : நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், அரசு அலுவலகங்களின் முன்பாக மழைநீர் தேங்குவதால், அந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது. ஓமலூரில் அரசு அலுவலக வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், இனிமேல் மழை நீர் தேங்காதவண்ணம் கால்வாய் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading