முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போது மழை பெய்வதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனால் வெள்ளிக்கிழமையான (பிப்-10) இன்று தொடங்கி 14-ஆம் தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை,  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு ஏதும் பதிவாகவில்லை. அதேபோல் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”ஓபிஎஸ் – டிடிவி கூட்டணி; அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை” – தமிழ் மகன் உசேன்!

Web Editor

தியாகிகள், படைப்பாளிகள், திராவிட இயக்க முன்னோடிகளுக்கு திரு உருவச்சிலை – அமைச்சர்

Halley Karthik

காதல் ஜோடி உயிரிழப்பு முயற்சி: காதலி பரிதாப உயிரிழப்பு!

Jeba Arul Robinson