30.6 C
Chennai
April 19, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

குஜராத்தில் ரூ.360 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

குஜராத் கடற்கரை பகுதியில் சென்ற பாகிஸ்தான் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.360 கோடி மதிப்பு கொண்ட 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜராத் கடற்கரை பகுதியில், சர்வதேச கடல் எல்லைக்கோடு பகுதியில், இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அப்போது, பாகிஸ்தானுக்கு சொந்தமான அல் சகார் என்ற படகு சிக்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் சோதனை நடத்தியதில் 50 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.360 கோடி ஆகும். இதனையடுத்து அந்த படகையும், அதில் இருந்த 6 பேரையும் கைது செய்து போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கொச்சி கடற்கரையில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1,200 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருள்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவை என்பதற்கான சிறப்பு அடையாள குறியீடுகள் அந்த பாக்கெட்டுகளில் இருந்ததாக போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading