கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி – காவல்துறை

இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த சென்னை காவல்துறை முடிவெடுத்துள்ளது. சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 30 நிமிட காணொலி மூலம் பள்ளி…

இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த சென்னை காவல்துறை முடிவெடுத்துள்ளது.

சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 30 நிமிட காணொலி மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று இந்த விழிப்புணர்வை உதவி ஆணையர், ஆய்வாளர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 3 பள்ளி/கல்லூரிகள் வீதம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து பிரதிநிதிகளாக மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் போதைப் பொருள் பயன்பாடற்ற பகுதியாக உள்ளது என்பது உறுதி செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.