சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில், குளிர்பானம் குடித்த 2 சிறுவர்கள் ரத்த வாந்தி எடுத்ததால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவரின் 8 வயது மகனும், 6 வயதான தங்கை மகனும் வீட்டின் அருகே உள்ள மளிகைக்கடையில் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து, அந்த சிறுவர்கள் இரண்டு பேரும் திடீரென ரத்த வாந்தி எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அங்கு தீவிர கிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








