32.2 C
Chennai
September 25, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

தேர்தல் சுயநலத்திற்காக விவசாயக் கடன் தள்ளுபடி: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திமுக சொல்வதை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்தி பகுதியில் நடைபெற்ற  “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். கோயில்கள், கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என குறிப்பிட்ட ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினராக கனிமொழி தேர்வாகி, 2 ஆண்டுகளில் தொகுதிக்கு செய்த திட்டப்பணிகளை பட்டியலிட்டார். 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் கோரிக்கைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காண தனித் துறை அமைக்கப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். தேர்தல் சுயநலத்திற்காக அதிமுக அரசு விவசாயக் கடன்களை ரத்து செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் ரத்து என்ற அறிவிப்பைத் தொடர்ந்தே, தற்போது பயிர்க்கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும், திமுக சொல்வதை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வருவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

விஜய் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

Halley Karthik

PhD முடித்த பார்வை மாற்றுத்திறனாளி பெண் – தடைகளை தகர்த்து சாதனை!

Web Editor

இந்தியா-ஆஸி. 3வது ஒருநாள் போட்டி டிக்கெட் முன்பதிவு: சேப்பாக்கத்தில் நள்ளிரவு முதல் காத்திருக்கும் ரசிகர்கள்!

Jayasheeba

Leave a Reply