திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு முன்னிலை வகித்து வருகிறார்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் அதிமுக, திமுக தலைமையில் ஓர் கூட்டணியும், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தலைமையில் ஓர் அணியும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மற்றொரு அணியும் களம் இறங்கின. சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி, தனியாக போட்டியிட்டது. தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள்பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.என்.நேரு முன்னிலை பெற்றுள்ளார். நான்காவது சுற்று முடிவில், கே.என்.நேரு 16,633 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் பத்மநாபன் 5772 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத் 2417 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.







