பழனியில் பலத்த காற்றால் சேதம் அடைந்த நெற்பயிர்கள்: உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என காத்திருந்த விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி…

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திடீரென வீசிய சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என காத்திருந்த விவசாயிகள் பெரும்
கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டார பகுதிகளான கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.ஏற்கனவே இந்தாண்டு பொய்த்துப் போன பருவமழையால் இப்பகுதியில் கடுமையாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சில நூற்றுக்கணக்கான ஏக்கரில் மட்டும் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை திடீரென இப்பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என காத்திருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே அரசு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.