முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

இந்தியா-சீனா எல்லை மோதல் குறித்து விவாதம் நடத்துவதற்கான நோட்டீசுக்கு அனுமதி வழங்காததால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், இந்தியா – சீனா எல்லை மோதல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதற்கு அவை தலைவர் ஜெகதீப் தன்கர், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளதாகவும், அவையின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தினார். ஆனால், நமது நிலத்தை சீனா ஆக்கிரமித்திருக்கும் நிலையில், அந்த பிரச்னையை பற்றி பேசாமல், வேறு என்ன பேச வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அவைத் தலைவர் பேச அனுமதி வழங்காததால், அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

`ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

G SaravanaKumar

ஐரோப்பா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

Gayathri Venkatesan

ஜனநாயகம் வென்றது ! உச்சநீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்

Web Editor