#Crime – கணவன் கண்முன்னே மனைவி சுட்டுக்கொலை! பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் அரங்கேறிய கொடூரம்!

ஹரியானாவில் நிலத் தகராறு காரணமாக கணவன் கண்முன்னே மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டம் குடானா கிராமத்தை சேர்ந்தவர் முன்னிதேவி(40). இவர் தனது கணவர் தினேஷ் குமாருடன் நேற்று,…

#Crime - Wife shot to death in front of husband - Atrocity staged at bus station in broad daylight!

ஹரியானாவில் நிலத் தகராறு காரணமாக கணவன் கண்முன்னே மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டம் குடானா கிராமத்தை சேர்ந்தவர் முன்னிதேவி(40). இவர் தனது கணவர் தினேஷ் குமாருடன் நேற்று, மகேந்திரகர் சதார் காவல் நிலையத்தில் மோகித் என்பவர் மீது நிலத் தகராறு காரணமாக புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணைக்காக இருதரப்பினரையும் காவல்துறையினர் அழைத்துள்ளனர்.

பின்னர் பேருந்து நிலையத்தில் முன்னிதேவியும், அவரது கணவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மோகித் திடீரென துப்பாக்கியால் முன்னிதேவியின் நெற்றியில் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் முன்னிதேவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

தொடர்ந்து தப்பியோடிய மோகித்தை போலீசார் கைது செய்தனர். பட்டப்பகலில் மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.