விருதுநகரில் காதலி உயிரை மாய்த்துக் கொண்டார் உயிரிழந்த நிலையில், காதலனும் உயிரிழப்புக்கு முயற்சித்துள்ளார்.
விருதுநகர் அருகே, சோலை மணி(20) என்ற பெண்ணும் பிரவீன் குமார் என்பவரும் காதலித்து வந்தனர். சோலை மணி தனியார் மருத்துவமமையில் செவிலியராக பணியாற்றி வந்த சோலை மணி (20) என்ற பெண் இன்று காலை 11 மணி அளவில் ரயில் முன் பாய்ந்துஉயிரை மாய்த்துக் கொண்டு உயிரிழந்தார். காதலியின் இறப்பை தாங்கமுடியாமல், காதலன் பிரவின் குமார் (28), தானும் ஒரு உயிரிழப்புகடிதம் எழுதி அதை வாட்ஸ் அப் பக்கத்தில் பதிவிட்டு 1 மணி அளவில் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்பு, அங்கிருந்த பொதுமக்கள் பலத்த காயங்களுடன் இருந்த பிரவீன் குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட பிரவீன் குமாரின் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தற்போது விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் பிரவீன்குமார் எழுதிய கடிதத்தில் சோலைமணி பணிபுரியும் மருத்துவமனையில் உடன் பணிபுரியும் புவனா ஸ்டீபன், ராஜ் மற்றும் அர்ச்சனா ஆகியோர்தான் காரணம் எனக்கூறி உயிரிழப்பு முயற்சிக்கு முன்பு பிரவீன் குமார் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், சோலை மணிக்கும் உடன் பணிபுரியும் புவனா, ஸ்டீபன் ராஜ் மற்றும் அர்ச்சனா ஆகியோருக்கும் ஏதேனும் மோதல் ஏற்பட்டு சோலை மணி உயிரை மாய்த்துக் கொண்டார் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.