பழங்குடி கிராமங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்தி வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள்!

கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் படகு மூலம் பழங்குடி கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சுகாதார துறை அதிகாரிகள். கன்னியாகுமாரி மாவட்ட…

கன்னியாகுமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் படகு மூலம் பழங்குடி கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சுகாதார துறை அதிகாரிகள்.

கன்னியாகுமாரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான பேச்சிப்பாறை அருகே தச்சமலை, மோதிரமலை, களப்பாரை போன்ற கிராமங்களில் நாளுக்கு நாள் தொற்று அதிரித்து வரும் நிலையில், அன்மையில் மாவட்ட ஆட்சியாளர் அரவிந்த் சுகாதார துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த நிலையிலும் பழங்குடி மக்கள் யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராததால் பேச்சிப்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் படகுகள் வாயிலாக தச்சைமலையில் நேரடியாக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.