கொரோன தடுப்பு நடவடிக்கை; பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை

இந்தியாவில் தற்போது பரவி வரும் பிஎப் 7 கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா…

இந்தியாவில் தற்போது பரவி வரும் பிஎப் 7 கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து இந்தியாவிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சர்வதேச விமானநிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.இந்நிலையில் கொரோன நிலவரம் குறித்து ஆராய பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நிதி ஆயோக் உயர் அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் தற்போது கிறிஸ்துமஸ், ஆங்கில வருடபிறப்பு உள்ளிட்ட பல பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. எனவே பண்டிகை காலங்களில் மக்கள் என்ன மாதிரியான கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டாக தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.