நடிகர் விஜய்யை போதைப் பொருளாக சித்தரித்துசார்பில் வெளியிடப்பட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காவல்துறை சார்பில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல போதைப் பொருள் பயன்பாடு இளைஞர்களிடையே பெருகிவரும் நிலையில், பல்வேறு விழிப்புணர்வுகளும் தமிழக காவல்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் தமிழக காவல்துறையின் மாநில போதைப்பொருள் தடுப்புக்கான நுண்ணறிவு பிரிவு மூலம் ட்விட்டரில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.
தேர்தலில் வாக்களிக்க வரும் நடிகர் விஜய்யை கவனிக்காமல் அருகில் இருந்த தேர்தல் அதிகாரிக்கு கைகொடுத்துச் சென்ற வாக்காளரின் வீடியோவை பதிவிட்டு அதில் நடிகர் விஜயை போதைப் பொருளாகவும், தேர்தல் அதிகாரியை நல்ல வாழ்க்கையாகவும், கைகொடுத்துச் சென்ற வாக்காளரை போதைப் பொருள் பயன்படுத்துபவர்களாகவும் சித்தரித்து, போதைப் பொருளை இதுபோல் கவனிக்காமல் கடந்து சென்று நல்ல வாழ்க்கையை கையகப்படுத்த வேண்டும் என்ற பொருள்பட வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வீடியோ விஜய் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் மாநில போதைப்பொருள் தடுப்புக்கான நுண்ணறிவு பிரிவையும், அந்த துறையின் எஸ்.பி ரோகித் நாதனையும் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த வீடியோ காவல்துறையால் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.