நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதியதாக 5 ஆயிரத்து 880 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், மீண்டும் தொற்று பாதிப்பு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கேரளா, புதுச்சேரி, புதுடில்லி, ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் விழிப்புடன் செயல்பட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 199-ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 880 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கொரோனா தொற்றால் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 481 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 85 ஆயிரத்து 76 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









