பணி பாதுகாப்போடு, பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 2000க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ரூ.14,000 மாத சம்பளத்தில் தற்காலிக முறையில் பணி அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் கடந்த 30ம் தேதி டிசம்பர் மாதம் எம்ஆர்பி கோவில் 2,472 தற்காலிக செவிலியர்களை பணியில் இருந்து விடுவித்து சுகாதாரத் துறையின் சார்பில் அரசாணை பிறபிக்கப்பட்டிருந்தது.
மேலும் அதற்கு பதிலாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வழங்கப்படும்
என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணியானது ஒவ்வொரு 11 மாதத்திற்கும் ஒருமுறை சர்வீஸ் பிரேக் அப் செய்து நிரந்தரமாக தற்காலிக ஊழியர்கள் ஆகவே இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். ஆகையால் தங்களுக்கு பணி பாதுகாப்போடு நிரந்தர பணி வழங்க கோரி தமிழ்நாடு முழுவதிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இந்த போராட்டம் 6வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று அதிமுக கோரியதோடு, செவிலியர்களின் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன் தொடர்ந்து 6-வது நாளாக போராட்டம் நடத்திய ஒப்பந்த செவிலியர்களை இன்று போலீசார் கைது செய்தனர்.








