விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர், “தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு பெரும் ஆதரவு உள்ளது. சாதி, மதம் பார்த்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பணி செய்யவில்லை. அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
திமுக கூட்டணியில் இருந்து தான் மாநில கட்சியாக விசிக அங்கீகாரம் பெற்றுள்ளோம். விஜய் கட்சிக்கு மற்ற கட்சிக்கும் செல்ல வேண்டுமென கூறினார்கள். கூட்டணிக்கு அழைப்பும் வந்தது. பதவிக்காகவோ, தொகுதிக்காகவோ ஆசைபடுபவன் நான் அல்ல.
விசிகவிற்கு 8 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மிகுந்த மன உளைச்சல் இருந்தது.
பாஜகவினர் சமத்துவத்தை பற்றி பேசுவதில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில்லை. அவர்களை தூக்கி பிடிப்பவர்களுடன் செல்வதில்லை. அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைக்கவில்லை. கொள்கைக்காகவும் கோட்பாட்டிற்காக தான் திமுகவுடன் கூட்டணி. அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிச்சாமி ஆறு மாதம் கூட முதல்வராக இருக்க முடியாது. இரட்டை இலைக்கு வாக்களித்தால் அது பாஜகவிற்கு வாக்களிப்பது போல தான்.
விசில் அடிப்பவர்களுக்கு தியேட்டரில் தான் வேலை. அவர்களை மிண்டும் அங்கேயே அனுப்பி விடலாம். சட்டசபையில் கை தட்ட முடியாது, விசில் அடிக்க முடியாது. மேசை தட்டலாம். விசில் அடிப்பவர்களுக்கு சட்டசபையில் வேலை இல்லை” என தெரிவித்தார்







