வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி டிராக்டரில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த 9 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மாநில எல்லைப் பகுதியில் போராட்டம் நடத்தி வந்த அவர்கள், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதை அடுத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இப்போது போராடி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் பரபரப்பான நிலையில், நாடாளுமன்றம் இன்று (26 ஆம் தேதி) வரை ஒத்தி வைக்கப்பட்டு இன்று மீண்டும் கூடியது.
இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி எம்.பி, டிராக்டரில் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தார்
பின்னர் அவர் கூறும்போது, போராடி வரும் விவசாயிகளின் குரலை நாடாளுமன்றத் துக்கு கொண்டு வந்துள்ளேன். அரசு, அவர்களின் குரல்களை ஒடுக்குகிறது. நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதம் நடத்தவும் அனுமதிக்கவில்லை. அவர்கள் இந்தக் கருப்புச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
இந்த சட்டங்கள் இரண்டு மூன்று தொழிலதிபர்களுக்கு சாதகமானது என்பது இந்த நாட்டுக்கே தெரியும். அரசின் கூற்றுப்படி, விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இங்கே போராடி வருபவர்கள் தீவிரவாதிகள். ஆனால், உண்மையில் விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன’ என்று ராகுல் காந்தி கூறினார்.