தமிழகம்செய்திகள்

சூறாவளிக்காற்றால் 1000க்கும் மேற்பட்ட தென்னைகள் சேதம்- இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தேனியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 1000க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சரிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. 

தேனி மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தில் பல ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள்
சாகுபடி செய்யப்பட்டு தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் பல
வருடங்களாக தென்னை மரங்களை வளர்த்து ஏராளமான விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் தேனி மாவட்டத்தில் திடீரென நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் பெய்த இந்த மழையின் தாக்கத்தால் பூதிப்புரம் சன்னாசியப்பன் மலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் சுமார் 1000ற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு விழுந்தது.மேலும் மின் கம்பங்களும் ஒடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக முன்கூட்டியே மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. தென்னை மரங்கள் வேரோடு விழுந்ததால் பல வருடங்களாக தென்னை மரங்களை வளர்த்து பராமரித்து வந்த விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கள் பிள்ளைகள் போல் பராமரித்து வளர்த்து வந்த மரங்கள் சரிந்து விழுந்தது வேதனை அளிக்கிறது என்றும், மேலும் சேதமடைந்த மரங்களை அகற்றுவதற்கே பல லட்சம் செலவாகும் என்பதால் சேதம் அடைந்த மரங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தென்னை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் – அரசு அதிரடி நடவடிக்கை

Janani

வெப் தொடரில் இலங்கை தமிழ்ப் பெண்ணாக நடிக்கிறார் சமந்தா!

Halley Karthik

ஊடகத்துறையில் ஷண்முகம் பங்கு அளப்பரியது – அண்ணாமலை இரங்கல்

Dinesh A

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading