முக்கியச் செய்திகள் தமிழகம்

போக்குவரத்து கழகங்களுக்கான குழு – கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் இணைப்பு

போக்குவரத்து கழகங்களுக்கான பொதுவான நிலையாணையில் திருத்தம் மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவில் கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் சேர்த்து புதிய ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து கழகங்களுக்கான பொதுவான நிலையாணையில் மாற்றம் செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் 5 பேர் மற்றும் மூன்று தொழிற்சங்கங்கள் அக்குழுவில் இணைக்கப்பட்டன. இதையடுத்து கூடுதல் தொழிற்சங்கங்களை இணைக்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், அவர்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, தற்போது கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் தொழிலாளர்களுக்கு, போக்குவரத்துக் கோட்ட  மாறுபாடின்றி ஒரே விதமான தண்டனை வழங்கும் வகையில், இக்குழு விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெத்தேல் நகர் வழக்கு, “அரசின் நடவடிக்கை சரிதான் ”;உயர்நீதிமன்றம்.

G SaravanaKumar

கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் மூலம் கடன் பெற்று ரூ.7 கோடி மோசடி

G SaravanaKumar

அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

G SaravanaKumar