போக்குவரத்து கழகங்களுக்கான பொதுவான நிலையாணையில் திருத்தம் மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவில் கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் சேர்த்து புதிய ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று போக்குவரத்து கழகங்களுக்கான பொதுவான நிலையாணையில் மாற்றம் செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் 5 பேர் மற்றும் மூன்று தொழிற்சங்கங்கள் அக்குழுவில் இணைக்கப்பட்டன. இதையடுத்து கூடுதல் தொழிற்சங்கங்களை இணைக்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், அவர்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, தற்போது கூடுதலாக 5 தொழிற்சங்கங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் தொழிலாளர்களுக்கு, போக்குவரத்துக் கோட்ட மாறுபாடின்றி ஒரே விதமான தண்டனை வழங்கும் வகையில், இக்குழு விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள உள்ளது.