‘கல்லூரிப் பேராசிரியையின் சாதி வெறி கண்டிக்கத்தக்கது’ – மநீம

மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய பேராசிரியர்களே, அந்த கொடுங்குன்றத்தைப் புரிவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “குறிப்பிட்ட சமூக…

மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய பேராசிரியர்களே, அந்த கொடுங்குன்றத்தைப் புரிவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “குறிப்பிட்ட சமூக மாணவர்கள் என்றாலே பிரச்சினைதான். உன் முகத்தைப் பார்த்தாலே நீ எந்த சாதி என்று தெரிகிறது” என மாணவரிடம் விஷத்தைக் கக்கியிருக்கிறார் சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியை ஒருவர். இது தொடர்பான ஆடியோ வெளியாகி, அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘‘அரசு பள்ளிகளில் சேர்வதற்கான ஆர்வம் மாணவர்களிடம் அதிகரித்துள்ளது’ – அமைச்சர் ரகுபதி’

மேலும், “அந்தக் குறிப்பிட்ட சாதி பசங்களால்தான் நமக்குப் பிரச்சனை, நீ எந்த கம்யூனிட்டி?” என்றும் அவர் கேட்டிருக்கிறார். தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய பேராசிரியர்களே, அந்த கொடுங்குன்றத்தைப் புரிவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனக் கண்டித்துள்ளதோடு, இளம் தலைமுறையை நல்ல முறையில் வழிநடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களில் சாதி புரையோடிப் போயிருக்கிறது.

சாதியை முன்னிறுத்தி, மாணவர்களை இழிவுபடுத்திப் பேசியது உண்மையெனில், சம்பந்தப்பட்டவரைத் தண்டிக்க வேண்டும். இனியும் இதுபோல நிகழாத வகையில், கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.