மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதன் மூலம் இங்கிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனை தொடர்ந்து வரும் 5ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்ள உள்ளது.




