முதல்வர் பழனிசாமி நாளை வேட்பு மனுத்தாக்கல்!

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பகல் ஒரு மணிக்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து, நாளை மாலை 3.00 மணி முதல் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி, ஜலகண்டபுரம், செட்டிமாங்குறிச்சி, எடப்பாடி நகராட்சி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார். தொடர்ந்து, 16 மற்றும் 17-ந் தேதிகளில் 17 சட்டமன்ற தொகுதிகளில், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்க உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.