அரசின் அறிவிப்புகள் வெற்றுக் காகிதங்களாகவோ வெறும் காற்றில் கலந்து கரைந்து போவதாகவோ இருந்து விடாமல், அவை முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா, ஒவ்வொரு அறிவிப்புக்குமான செயல்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உழவர் ஓதை, மதகு ஓதை, உடைநீர் ஓதை தண்பதங்கொள் சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி” என்ற சிலப்பதிகார வரிகளுக்கு சிறப்பான உரை எழுதிடும் வண்ணம், கரைபுரளும் காவிரி டெல்டா மாவட்டங்களில், ஓய்வில்லாத இரண்டு நாள் ஆய்வு சுற்றுப் பயணத்தை நிறைவு செய்தபின், நேற்று காலையில் தலைமைச் செயலகத்தில் அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், அரசின் அறிவிப்புகள் வெற்றுக் காகிதங்களாகவோ வெறும் காற்றில் கலந்து கரைந்து போவதாகவோ இருந்து விடாமல், அவை முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா, ஒவ்வொரு அறிவிப்புக்குமான செயல்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாக, 14 துறைகளுடன் ஆய்வு செய்ததாக குறிப்பிட்டுள்ள அவர், 4 மணி நேர ஆய்வுக்குப் பிறகு, இந்தக் கடிதத்தை எழுதுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘ஆவின் தலைமையகத்தின் விற்பனை மேலாளர் பணியிடை நீக்கம்’
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ‘யாதும் ஊரே என்ற பொறுப்புணர்வுடன் அனைத்து ஊர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டாலும், காவிரி டெல்டாவுக்கு வரும்போது தாய்மடியைத் தேடி வந்து தவழ்கின்ற குழந்தை உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ள அவர், திருவாரூர் என்கிற போது கருணாநிதியின் காலடிச் சுவடுகளைக் காண்பது போன்ற உணர்வில் மெய்சிலிர்ப்பது வழக்கமாக இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நம் ஆருயிர்த் தலைவர் போல என்றும் ஓயாது உழைக்க வேண்டும் என்ற தளராத ஊக்கத்தைத் தருவதாகவும், காவிரியும் அதன் கிளை ஆறுகளும் பாயும் இடங்களுக்குச் செல்லும்போது நல்ல உணர்வு கிடைப்பதாகவும், என்ன இருந்தாலும் அடிப்படையில் தான் டெல்டாகாரன் என நெகிழ்ச்சிப்பட முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.