நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: தலைமை நீதிபதி கவலை

டெல்லி ரோகிணி கீழமை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவலை தெரிவித்துள்ளார். டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போல் நுழைந்த கும்பல் திடீரென…

டெல்லி ரோகிணி கீழமை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவலை தெரிவித்துள்ளார்.

டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் போல் நுழைந்த கும்பல் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், பல்வேறு குற்ற வழக்கு களில் தொடர்புடைய பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி என்பவர் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில், 2 பேர் உயிரிழந்தனர்.

ஜிதேந்தர் கோகியை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றபோது எதிர்தரப்பு ரவுடிகள் கொலை செய்துள்ளனர். நீதிமன்ற வளாகத் தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கவலை தெரிவித்துள்ளார். டெல்லி கீழமை நீதிமன்றங்களில் உரிய பாதுகாப் பினை உறுதிப்படுத்த வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் டெல்லி காவல்துறை யினருடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.