சென்னை மெரினா கடற்கரையில் இயந்திர கழிவுகளால் வடிவமைக்கப்பட்டுள்ள
சிற்பங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்ஒரு பகுதியாக, வில்லிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட, பயன்படாத இந்திர கழிவுகளைக் கொண்டு, கடல் உயிரின வடிவிலான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுறா மீன், இறால், நண்டு வடிவிலான சிற்பங்கள், கடற்கரைக்கு வரும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த சிற்பங்கள் அழகிய கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த உலோக சிற்பங்கள் கடற்கரையை மேலும் அழகுறச் செய்கிறது. பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிற்பங்கள் முன்பு, கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.