முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா ஒத்திவைப்பு – காரணம் இதுதான்…!

சென்னை கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழா, குடியரசுத்தலைவரின் பணிகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பினை ஏற்று சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைக்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு முன்னர் அறிவித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதேபோல், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறும் தமிழ்நாட்டின் ‘செங்கோல்’ – சிறப்புகள் என்ன?

இந்நிலையில், குடியரசுத் தலைவரின் வேறு பணிகள் காரணமாக ஜூன் 5 ஆம் தேதி அவர் தமிழ்நாடு வருவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழா ஜூன் 5 ஆம் தேதிக்குப் பதில், குடியரசுத் தலைவர் அளிக்கும் வேறொரு நாளில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜம்மு – காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி

EZHILARASAN D

’யாரும் கேமுக்கு அடிட் ஆகாதிங்க’ -உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்

Arivazhagan Chinnasamy

முத்துக்குமரனின் உடலில் பல இடங்களில் காயங்கள்-பிரேத பரிசோதனையில் தகவல்

Web Editor