முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் வீடு வீடாக மீண்டும் கொரோனா பரிசோதனை!

சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக மாநகராட்சி முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை நான்கு ஆயிரத்தை எட்டிய நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு ஆயிரத்தை கடந்து வருவதால், மாநகராட்சி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக மீண்டும் பரிசோதனை தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் உதவியுடன் கொரோனா தடுப்பு பணிகள் தீவிர படுத்தப்படும் என்றும், முழு வீச்சில் பணிகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram