29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் கொரோனா

அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனா

சென்னையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகர் கிரியப்பா சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுவன் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்று எண்ணிக்கை உலகம் முழுவதும் கூடுதலாக தொடங்கியுள்ளது. இந்தியாவில் மட்டும் நேற்று 4000 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. அதேபோல, கேரளாவில் தொற்று எண்ணிக்கை 1000-க்கும் மேல் பதிவாகியுள்ளது. இதனால், முதலமைச்சர் ஆலோசனையின் படி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், விஜடி போன்ற இடங்களில் வெளிமாநிலங்களில் இருந்து மாணவர்கள் வருவதால் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்த அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 பேர் மற்றும் விஐடியில் 193 பேர் விடுதியில் தனிமையில் உள்ளதாக தெரிவித்தார்.

அணமைச் செய்தி: ‘ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை; மேலும் ஒருவர் கைது’

மாணவர்கள் உணவருந்தும் போது ஒன்றாக இருப்பதால் தொற்று அதிகரிக்கிறது எனவும், சென்னையில் பல்வேறு குடியிருப்புகளில் தொற்று சற்று அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். சென்னையை பொறுத்தவரை 370 பேருக்கு தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், கிரியப்பா சாலையில் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதக்க தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று சற்று கூடுதலாகி வருவதாகவும், சென்னையை பொறுத்தவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருவதாக தெரிவித்த அவர், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எதுவும் இல்லை என கூறினார்.

மேலும், 13 மற்றும் 9-வது மண்டலத்தில் தொற்று சற்று அதிகமாக உள்ளது. ஆனால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை என கூறிய அவர், இரண்டாம் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆகுகின்றது இதனால், தொற்றும் தன்மை சற்று குறையும். ஆனால், தற்போது உள்ள இந்த வைரஸ் அதிக அளவில் பரவும் தன்மை கொண்டதாக உள்ளதால் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading