தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் திருவான்மியூர், பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரியில் என அடுத்தடுத்து 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து காவல் நிலையங்களில் அளித்த புகாரின் அடிப்படையில் சுமார் 20 சவரனுக்கு அதிகமான தங்க நகைகள் பறித்து செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
புகாரைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்பையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.







