கோவையில் இன்ஸ்டாகிராமில் புகைப்பிடித்தவாறு பட்டாகத்தி போன்ற ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்ட இளம் பெண்ணை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
கோயம்புத்துார் மாவட்டம், ஆவாரம்பாளையம் பகுதியின் அருகில் சத்திய பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டு, அரிவாளால்லா வெட்டி கொலை செய்தனர். மறுநாளே நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் பட்டப்பகலில் வெட்டிகொலை செய்யப்பட்டார். முன் பகை காரணமாக இப்பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவங்களை தொடர்ந்து மாநகர போலீசார் ரவுடிகளை கண்காணித்து வருகின்றனர்.
இது வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று சமூக வளைதளங்களையும் சைபர் கிரைம் போலீசார் உண்ணிப்பாக கவனித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் “பிரண்ட்ஸ் கால் மி தமன்னா” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்பிடித்தவாறும், பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில் எதிரி போட நினைத்தால், அவனை போடும் ஓடுனா கால வெட்டுவோம் என்ற வன்முறையை துாண்டும் வகையிலாக பாடலுடன் வெளியிட்டுள்ளார். இந்த பெண் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவைர கொலை செய்த நபர்களுடன் இன்ஸ்டாகிராமில் நண்பராக உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்பெண்ணை பிடிக்க மாநகர போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்.
-அனகா காளமேகன்