தமிழ்நாட்டின் கும்முடி பூண்டியை கூட தாண்டாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கட்சி பணி நிமித்தமாக விழுப்புரம் சென்ற பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் விழுப்புரம் மாவட்டத்தில் பாஜக வளர்ச்சியடைந்து வருவதாகவும், உள்கட்டமைப்பினை வைத்து இங்கு அரசியல் பேசப்படவில்லை, ஜாதியை வைத்து தான் அரசியல்
செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி குறித்து பேசிய அண்ணாமலை, தேர்தலில் மக்கள் ஒரு தீர்ப்பினை கொடுத்துள்ளனர். அதை தலைவனாக்னி ஏற்கிறேன். காங்கிரஸ்-திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகே எஸ் இளங்கோவன் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இடைத்தேர்தல் வெற்றி என்பது எப்போதும் ஆளுங்கட்சியை சார்ந்து தான் இருக்கும். அதற்காக திமுக
ஸ்டாலினின் 24 மாத காலம் இருந்ததற்காக மக்கள் வாக்களித்தார்கள் என்று ஏற்று கொள்ள மாட்டோம். 2024 தேர்தல் பாஜகவிற்கானதாக இருக்கும். எனவே 2024 வரை இடைத்தேர்தல் நடக்க கூடாது என வேண்டி கொள்ளவதாக அண்னாமலை கூறினார். மேலும் கூட்டணி நட்பு என்பது ஒரு சித்தாந்தத்தோடு இருப்பதால், பாஜக அதன் கூட்டணி கட்சியான அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தது. எங்களின் கூட்டணி பலமாக தான் உள்ளது என தெரிவித்தார்.
மேலும் திருமாவளவன் குறித்து பேசிய அவர், திமுகவிலிருந்து வெளிவர திருமாவளவன் புதிய யுக்தியை கையாள்வதாகவும், திமுக கூட்டணியிலிருந்து வெளி வரவேண்டுமென்றால் தைரியமாக வரலாம். திருமாவளவன் ஏன் சாக்கு போக்கு கூறுகிறார் என்று தெரியவில்லை. திருமாவளவன் பாஜக கட்சியும் , அண்ணாமலையை பற்றியும் மட்டுமே பேசுவதற்கு கூட்டங்கள் போடுகிறார் என தெரிவித்த அண்ணாமலை, கருத்தியல் குறித்து விவாதிக்க தயாரா என கேட்கும் திருமாவளவன் தடா பெரியசாமியிடம் கருத்தியல் தொடர்பாக விவாதிக்க தயாரா எனவும் ஜாதிய அமைப்புகளை கொண்ட கட்சியாக விசிக உள்ளதாக கூறினார். தமிழ்நாட்டில் நடக்கும் பாதி கலவரங்களுக்கு திருமாவளவன் தான் காரணம் என குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து சிலிண்டர் விலையேற்றம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், இந்தியாவில் கேஸ் விலையேற்றம் அடிக்கடி உயர்த்தபப்டுவதாக பலர் கூறுகின்றனர். ஆனால் மோடி தலைமைலிலான அரசு சொல்லாமைலையே பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது. கேஸ் பெட்ரோல், டீசால் போன்றவைகள் ரஷ்யாவில் இருந்து வாங்கப்படுவதால் தான் விலையேற்றம் ஏற்படுவதாக கூறினார்.
பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினின் தேசிய அரசியல் பற்றி கருத்து தெரிவித்த அண்ணாமலை, தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறும் ஸ்டாலின் கும்முடி பூண்டியை தாண்டாமல் எப்படி தேசிய அரசியலுக்கு வந்துவிட்டதாக கூறுகிறார் என்று தெரியவில்லை. அவர் அப்படி பேசுவதை ஏற்க முடியாது என்றும், பரூக்
அப்துல்லா தேஜஷி யாதவ் போன்றவர்கள் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வருவது தேசிய அரசியல் இல்லை எனவும் தெரிவித்தார். எப்போதுமே விலைபோகாத கத்திரிக்கையை கொண்டு வந்து தமிழக மக்களை ஏமாற்றுவதை திமுக செய்வதாகவும், கர்நாடாகவில் திமுக போட்டியிட்டு ஏற்றிப்பெற்றால் , அதன் பிறகு ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டுவதாக கூறினால் ஏற்போம் எனவும் கூறினார்.
மேலும் திரிபுராவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருப்பது குறித்து பேசிய அண்ணாமலை திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாகவும்,நாகலாந்தில் இரண்டு பங்கு பாஜகவிற்கு இடம் கிடைத்துள்ளதாகவும், மேகலாயவாவில் பாஜக கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி ஆட்சி செய்வதை அஷ்டலட்சுமி என்று கூறுவதாகவும் தெரிவித்தார்.











