மீண்டும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனை எதிர்ப்பு உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக எம்ஜிஆரால் தொண்டர்களுக்காக தொடங்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும் வரை அவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை. சிறப்பான மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சராக வந்தார். கடந்த முறை அதிமுகவுக்குள் எழுந்த பிளவு தான் திமுக ஆட்சிக்கு வர காரணம். இன்றைக்கும் அதே சூழல் தான் ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எண்ணம்” என்று தெரிவித்தார்.
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பொறுப்பை ஏற்க வேண்டும் அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு என்ற ஓ.பன்னீர்செல்வம், “ நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுவோம். அதிமுக ஜனநாயக ரீதியில் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது தனிப்பட்ட வெறுப்பு இல்லை. நானும், எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக கட்சி பணியாற்றினோம். கூட்டுத்தலைமை தான் அதிமுகவுக்கு சரியானது என உருவாக்கப்பட்டது. டிடிவியும், சசிகலாவும் அதிமுகவில் இணைய வேண்டும்” என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.