30.2 C
Chennai
June 29, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள்

பட்ஜெட் 2024 – வருமான வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்ன?

இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்,  வருமான வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில்,  அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத்  தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : பட்ஜெட் தாக்கலில் மொராஜி தேசாயின் சாதனையை சமன் செய்யும் நிர்மலா சீதாராமன்…!

நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்ற இவர், இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு பின்னர், மீண்டும் முழு வரவுசெலவுத் திட்டம் வரும் ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டை வருமான வரிச் சீர்திருத்தங்களை நடுத்தர வர்க்கத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.  பிரிவு 80C மற்றும் பிரிவு 80D போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் கிடைக்கும் சில வரி விலக்கு வரம்புகள் உயரும் என்று நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு: 

வருமான வரி விலக்கு வரம்பை ₹2.5 லட்சத்தில் இருந்து ₹ 5 லட்சமாக மாற்றப்படலாம் என நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2023 அன்று தாக்கல் செய்தபோது, ​​புதிய வருமான வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் தனிநபர்களுக்கான வரி அடுக்குகளின் விகிதங்களை மாற்றினார்.  இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்புகள் உள்ளது. குறிப்பாக,

3 முதல் 6 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.

6 முதல் 9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

15 சதவீதத்தில்  9 முதல் 12 லட்சம் வரை வருமானம்.

20 சதவீதத்தில்  12 முதல் 15 லட்சம் வரை வருமானம்.

15 லட்சம் மற்றும் அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.  மேலும் 3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிவு 80C வரம்பில் உயர்வு : 

பிரிவு 80C இன் கீழ் முதலீட்டு தற்போதைய வரம்பு ₹ 1.5 லட்சம்,  அதிக வரி சேமிப்பு மற்றும் அதிகரித்த முதலீடுகளை அனுமதிக்க அதிகரிக்கப்பட வேண்டும்.  முந்தைய வரம்பு ₹ 1 லட்சமாக 2003 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.  இது 2014 இல் 50% மட்டுமே அதிகரித்துள்ளது,  இது ஆண்டுதோறும் 3% க்கும் குறைவாகவே செயல்படுகிறது.  இது குறைந்தபட்சம்  2.50 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்” என்று மும்பையைச் சேர்ந்த வரி மற்றும் முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின் கூறினார்.

நிலையான வரி விலக்கில் உயர்வு : 

2018-ம் ஆண்டில்  ₹ 40,000 சம்பளத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு 50,000 ஆக உயர்த்தப்பட்டது. இப்போது, ​ ​மருத்துவச் செலவுகள் மற்றும் எரிபொருளின் விலைகள் அதிகரித்து வருவதை அடுத்து, 50,000 இருந்து 1 லட்சம் வரை நிலையான வரி விலக்கு வரம்பை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடு வாங்குபவர்களுக்கு நிவாரணம் : 

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன்  விதிகளின்படி,  ஒரு குடியிருப்பு வீட்டிற்கு எடுக்கப்பட்ட வீட்டுக் கடனின் அசல் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக,  வரிக்குரிய வருமானத்தில் இருந்து ₹ 1.5 லட்சம் வரை விலக்கு கோர அனுமதி உள்ளது. 

மேலும்,  ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள்,  கல்விக் கட்டணம்,  வருங்கால வைப்பு நிதி மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் EPFக்கான பங்களிப்புகள்,  ELSS  முதலீடுகள், தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள்,  வரி சேமிப்பு வங்கி FDகள் போன்ற பிற தகுதியான செலவினங்களுடன் இந்த விலக்கு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கபட்டுகிறது.

3D விலக்கு வரம்பு அதிகரிப்பு : 

ClearTax  இன் நிறுவனர் மற்றும் CEO, அர்ச்சித் குப்தாவின் கூற்றுப்படி,  மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கான பிரிவு 80Dயின் கீழ் விலக்கு வரம்பு தனிநபர்களுக்கு 25,000 இருந்து 50,000 ஆகவும்,  மூத்த குடிமக்களுக்கு  50,000 முதல்  75,000 ஆகவும் அதிகரிக்கப்பட வேண்டும்.  பிரிவு 80D பலன்களை புதிய வரி முறைக்கு நீட்டிப்பது, சுகாதாரப் பாதுகாப்பிற்கான சமமான அணுகலை ஊக்குவிக்கும் எனவும் எதிர்பார்க்கபட்டுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading