ஸ்ரீவில்லிபுத்துார் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் கடத்தப்பட்டு தனியார் அரிசி ஆலைகளில் பதுக்கி வைக்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த கடத்தலில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பாதுகாப்பு அதிகாரியும் உடந்தையாக செயல்படுவது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட சோதனையின் போது ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து சந்தேகத்திற்கு இடமாக வாகனம் ஒன்று விருதுநகர் நோக்கி சென்றது. அப்போது அழகாபுரி வாகன சோதனை மையத்தில் முகாமிட்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை சாவடியை கடக்க முயற்சித்த குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் முருக செல்வம் என்வரின் வாகனத்தை சோதனையிட்டனர்.
அப்போது அதிலிருந்து கணக்கில் வராத ரூபாய் 4.35 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலிருக்கும் அரிசி ஆலை அதிபர்களிடம் பெற்ற லஞ்ச பணத்தை கொண்டு செல்வதாக முருக செல்வம் கூறினார். அதன் அடிப்படையில் அவரை கைது செய்து லஞ்சம் ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.