ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியானது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பவர காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதால், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை காவல்துறை வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில் ராஜ்பவன் மெயின்கேட் அருகே காவலர்கள் பாதுகாப்பு அலுவலில் இருந்தபோது, கருக்கா வினோத் என்பவர் நுழைவு வாயில் எண் 1-ன் எதிர்புறம் நின்றவாறு 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீப்பற்ற வைத்து வீசியதாக கூறப்பட்டுள்ளது. முதல் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் நுழைவு வாயிலின் முன் விழுந்த நிலையில், உடனடியாக வினோத்தை பிடிப்பதற்காக காவலர்கள் ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் மற்றொரு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை தீப்பற்ற வைத்து மீண்டும் காவலர்களை நோக்கி வினோத் வீசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்த சில காவலர்கள் சிலர் வினோத்தை மடக்கி பிடிக்க முற்பட்டபோது, ‘என்னை பிடிக்க வந்தீங்களா.. உங்க மேலேயும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிவிடுவேன்’ என்று அவர் மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : காஸா மீதான தரைவழி தாக்குதல் தள்ளிவைப்பு – அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேல் முடிவு
பின்னர் வினோத் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சொத்தை சேதபடுத்தியதற்காகவும், அதை தடுக்க வந்த காவலர்களை பணி செய்ய விடாமல் பெட்ரோல் பாட்டிலை வீசி மிரட்டியதற்காகவும் வினோத மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல் தகவல் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கிண்டி காவல் நிலைய தலைமைக் காவலர் மோகன் அளித்துள்ள புகாரின் பேரில் 5 பிரிவுகளின்கீழ் வினோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.