பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் ராஜினாமா – அதிமுகவில் இணைந்தார்

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார்  பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.      இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த…

பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார்  பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.     

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜவின் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது.

அண்மைச் செய்தி : முடிந்தால் 24 மணி நேரத்தில் கைது செய்யுங்கள்: சவால் விடுத்த அண்ணாமலை

சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்களையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவில் இருந்து விலகி நிர்மல் குமார் பசுமை வழிச்சாலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் முன்னிலையில் அதிமுக  இணைந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.