அதானி விவகாரத்தில் பாஜக பயப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. அதனால், அந்த குழுமத்தின் மதிப்பு இரண்டே நாட்களில் பல லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சரிந்தது. இந்நிலையில், தங்கள் மீதான விமர்சனங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அதானி குழுமம், 413 பக்க அறிக்கையையும் வெளியிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல. இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்று அதானி குழுமம் கூறியிருந்தது.
இதையும் படிக்கவும்; பழனி முருகன் கோயிலில் நடிகை சமந்தா சாமி தரிசனம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது இந்த விவகாரத்தை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி பெரும் அமளியில் ஈடுபட்டன. மேலும், இந்த விவகாராத்தில் நண்பரான அதானியை, பிரதமர் மோடி பாதுகாக்கிறார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.இதனிடையே, அதானி குழுமம் மீதான ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில், அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதா? என்பது குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா இன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அதானி குழும விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமித்ஷா, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றம் வசம் வழக்கு விசாரணையில் இருப்பதால், இந்த விவகாரத்தில் கருத்து சொல்வது சரியல்ல. ஆனால், இதில் பாஜக பயப்படவோ, மறைக்கவோ எதுவும் இல்லை என்றார்.