நீட் தேர்வை கொண்டுவர காரணமாக இருந்தது திமுக தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை வடவள்ளி இடையார்பாளையம் பகுதியில் பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாஜக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய அண்ணாமலை, கோவை மீது முதலமைச்சருக்கு திடீரென பாசம் வந்துள்ளதாகவும், அரவக்குறிச்சி மாடல் தேர்தல் போன்று மக்களை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். பாஜகவை எதிர்த்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் முதலமைச்சர் இருப்பதாகவும், பொய்யை மட்டுமே சொல்லி முதலமைச்சர் தேர்தல் பரப்புரை செய்து வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.
மேலும், ”ஒரு பக்கம் மருத்துவகல்லூரிகளை திறந்து வைத்து வருகிறோம். நீட்டை கொண்டு வர காரணமாக இருந்தது திமுக அரசு தான் திமுக சொன்ன தொடர் பொய்களை கூறியும், பிரதமர் அறிவித்த சாதனை திட்டங்களையும் சொல்லி வாக்கு கேளுங்கள். வேட்புமனு தாக்கலில் கூட ஆளுங்கட்சியினர் தலையீட்டால் ஒரு மாகபாரத யுத்ததைக் நடத்தி விட்டுதான் ஒவ்வொரு வேட்பாளர்களும் வந்துள்ளீர்கள்” என தனது கட்சியின் வேட்பாளர்களிடன் பாஜக கட்சி மாநில தலைவர் உரையாற்றினார்.